இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அவற்றில் யு.பி.ஐ மூலமானப் பணப் பரிவர்த்தனை அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான முடிந்த ஏப்ரலில் யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை ரூ.10 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது. அதாவது, 9.83 லட்சம் கோடி ரூபாய்க்கு பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதுவரை இந்த அளவுக்குப் பணப் பரிவர்த்தனை ஆனதில்லை எனும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு உயர்வாகும்.
கடந்த ஏப்ரல் 202-ல் 264 கோடி எண்ணிக்கையிலான யு.பி.ஐ பரிவத்தனைகள் நடந்துள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.4.93 லட்சம் கோடி ஆகும்.
அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்பாட்டுக்கு மாறியதும், அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற அரசின் தீவிர முயற்சியும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கசலுகைகள் வழங்கியதுடன், ரொக்கப் பணப்பரிவர்த்தனையைக் குறைக்க ஏ.டி.எம்-ல் பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகள், கட்டணங்கள் உயர்வு போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன