இந்நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியும், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை மதிப்பிடும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிக்காக, மதிப்பீட்டு குழுவினர் சென்னையில் இருந்து வந்துள்ளனர்.
பங்குதாரர் முருகன், ஜெயக்குமார் வீடுகளில் மட்டும், இதுவரை 75 கோடி ரூபாய் ரொக்கமாகவும் 20 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி வைர நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வாகனங்கள் மூலம் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
3-வது நாளாக தொடர்ந்து நடந்துவரும் இச்சோதனை, இன்றோடு முடியுமா அல்லது தொடருமா என்பது தெரியவில்லை. இதுவரை எவ்வளவு பணம், நகை, சொத்து ஆவணங்கள் கைப்பப்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வருமான வரித்துறை விரைவில் வெளியிடும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.