திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை. சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த திடீர் சோதனையால் திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சமீபத்தில் அடுக்கடுக்காக புகார்கள் வந்தது. டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலிப்பதாகவும், பார் டெண்டர் முறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்நிலையில் தற்போது ஐடி ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செந்தில் பாலாஜி வேலை வாய்ப்பு பணமோசடி தொடர்பான வழக்கில் புதிய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அமலாக்க இயக்குனரகம் சார்பில் 2021 ஆம் ஆண்டில், இந்த ஊழல் தொடர்பாக நான்கு வழக்குகளை பதிவு செய்தது. இதில் இரண்டு வழக்குகள் அரசுப் போக்குவரத்துத் துறையில் பேருந்து நடத்துனர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் மற்ற இரண்டு வழக்குகள் ஓட்டுநர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் நியமனம் தொடர்பானவை.
மேலும் படிக்க | நாடாளுமன்ற வளாகத்தில் தமிழரின் செங்கோல்! அப்படி என்ன சிறப்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ