இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று 1,77,295 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 14,016 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,53,721 ஆக அதிகரித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 25,895 கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிலுருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,74,247ஆக உள்ளது.
கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்தாலும் தினசரி உயிரிழப்பு என்பது குறையாமல் 400-க்குதம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது உயிரிழப்பும் குறைந்த உள்ளது. கொரோனா தொற்றினால் ஒரே நாளில் பேர் 267 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 29,547 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 1,895 பேருக்கும், ஈரோட்டில் 1,323 பேருக்கும், சென்னையில் 935 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.