குறிப்பாக பெண்களுக்கு எதிரான சுரண்டல், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி கொத்தடிமைகளாகப் பயன்படுத்துவது அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது போன்ற குற்றங்களுக்கு எதிராக சமூகம் விழிப்படைய வேண்டியுள்ளது.
இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 1827 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில், 40 சதவீதம் பேர் வளர், இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகள் ஆவர். சிலர் 9 வயதுக்கு குறைவான சின்னஞ்சிறு குழந்தைகள் ஆவர்.
ஆள் கடத்தலுக்கு எதிராக புதுமையான முறையில் விழிப்புணர்வு பிராசாரங்கள்
ஆப்பரேசன் ஸ்மைல் காசியாபாத் காவல்துறை: உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் காவல்துறை சார்பில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. காணாமல் போன குழந்தைகள் குறித்த வழக்குகளின் பட்டியல் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்த தகவல்களை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குழந்தை உரிமைகள் தொடர்பாக இந்தியா எங்கிலும் உள்ள மையங்கள் மற்றும் ஆணையங்களுக்கு காவல்துறை அனுப்பி வைத்தது.
Also read : Uber, Ola இணைகிறதா? ஓலா சிஇஓ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
குழந்தைகளை கண்டுபிடிக்க பிரத்யேகமான குழுக்கள் அமைக்கப்பட்டன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதள உதவிகள் மற்றும் விசாரணைகள் மூலமாக காசியாபாத்தில் 80 குழந்தைகளையும், பிற மாநிலங்களில் 147 குழந்தைகளையும் பெற்றோரிடம் இவர்கள் கொண்டு சேர்த்துள்ளனர்.
எம்ஐடி லிங்கான் லேப்: எம்ஐடி தயாரித்த ஆர்டிஃபிஷியல் இண்டெல்ஜன்ஸ் தொழில்நுட்பம் ஆகும். இது ஆயிரக்கணக்கான பாலியல் விளம்பரங்களை தாமாகவே ஆய்வு செய்து, அது ஆள் கடத்தலுடன் தொடர்புடையதா என்பதை கண்டறியும்.
எம்பிஎல் வழங்கும் மிஸ்ஸிங் கேம்:
எம்பிஎல் விளையாட்டு நிறுவனம் சார்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மிஸ்ஸிங் கேம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எம்பிஎல் பயன்படுத்தும் 90 மில்லியன் வாடிக்கையாளர்களில் ஏராளமானோர் இதை பயன்படுத்துகின்றனர். ஆப் மூலமாக ஆள் கடத்தலின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.
ப்ளூ ஹார்ட் விழிப்புணர்வு:
ஆள் கடத்தலுக்கு எதிரான ‘ப்ளூ ஹார்ட்’ லோகோ-வை ஐ.நா. அமைப்பு கடந்த 2009ஆம் ஆண்டில் உருவாக்கியது. தனிநபர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், தனியார் துறை போன்றவர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஸ்வயாங் சித்தா விழிப்புணர்வு:
இந்தியாவில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற ஆள் கடத்தல்களில் 25 சதவீத சம்பவங்கள் மேற்கு வங்கத்தில் நடைபெற்றவை ஆகும். அங்கு கடுமையாகப் பாதிக்கப்பட்ட 24-பர்கானாஸ் மாவட்டத்தில் காவல்துறை, மாணவர்கள், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், சமூக அமைப்புகள் உள்ளிட்டோர் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.